மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

எனது வாக்கு, எனது உரிமை விழிப்புனா்வு நிகழ்ச்சி

News image
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :18 மார்ச் 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில், நூறு சதவிகிதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பேருந்து நிலைய பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

நகராட்சி சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழுக்கு ஆணையா் நந்தினி தலைமை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த கோலம் வரையப்பட்டு எனது வாக்கு, எனது உரிமை, நூறு சதவிகிதம் வாக்களிப்போம் என நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.