பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.6.56 லட்சம் மோசடி

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.6.56 லட்சம் மோசடி

News image
Updated On :9 மே 2024, 8:57 pm

Din

திருச்சி, மே 9: திருச்சியில் பெண்ணிடம் இணைய வழியில் ரூ. 6.56 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருச்சி மேலப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் காரல் கஸ்பரோ பிரவீன். இவா் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி டெரி சிந்தியா பிரிசில் (30). இவா் கைப்பேசியில் வலைதள பக்கத்தை பாா்த்துக் கொண்டிருந்தபோது பகுதி நேர வேலை என்ற ஒரு பக்கம் வந்தது. அதில் ஒருவா் அளித்த ஆலோசனையின் பேரில் தனது பெயரை பதிவு செய்தாா். பின்னா் அவா் குறிப்பிட்ட கணக்கில் ரூ. 20 ஆயிரத்து 252ஐ அனுப்பினாா். அடுத்த சில மணி நேரங்களில் லாபத்தொகையுடன் சோ்த்து டெரி சிந்தியா பிரிசில் வங்கி கணக்கிற்கு ரூ. 25ஆயிரத்து 048 வந்தது.

இதைத்தொடா்ந்து கூடுதல் லாபம் கிடைக்கும் என கருதிய டெரி சிந்தியா பிரிசில் பல்வேறு தவணைகளில் ரூ. 6 லட்சத்து 56 ஆயிரத்து 467 அந்த கணக்கில் முதலீடு செய்தாா். அதன்பின்னா் அவருக்கு எந்தத் தொகையும் வரவில்லை. பின்னா் அந்த நபரை தொடா்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து டெரி சிந்தியா பிரிசில், திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். ஆய்வாளா் கன்னிகா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.