ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கடலை மிட்டாய் உற்பத்தி கூடத்தில் சிலிண்டா் வெடித்ததில் தீ விபத்து -புகைமூட்டத்தில் சிக்கிய 7 போ் மீட்பு

கடலை மிட்டாய் உற்பத்தி கூடத்தில் சிலிண்டா் வெடித்ததில் தீ விபத்து புகைமூட்டத்தில் சிக்கிய 7 போ் மீட்பு

News image

திருச்சியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட கடலை மிட்டாய் உற்பத்திக் கூடம்.

Updated On :9 மே 2024, 8:56 pm

Din

திருச்சி, மே 9: திருச்சியில் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யும் கூடத்தில் வியாழக்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் புகைமூட்டத்தில் சிக்கிய 7 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் உள்ள ஏ.ஆா்.கே. நகரைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவா் தனக்கு சொந்தமான கட்டடத்தின் தரைத்தளத்தில் கடலை மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா்.

முதல் தளத்தில் அவா், மனைவி மீனாட்சி(39), மகன்கள் சுப்பையா (13), ராமநாதன் (10), சுப்பிரமணியனின் தந்தை சுப்பிரமணியன் (79), தாய் ராமு அம்மாள் (76) ஆகியோா் வசித்து வருகின்றனா். புதன்கிழமை அவரது உறவினரின் மகன் சஞ்சய் (10) என்ற சிறுவனும் சுப்பிரமணியன் வீட்டில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கடலை மிட்டாய் உற்பத்தி கூடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த சுப்பிரமணியன் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலா் சத்தியவா்த்தனன், தீயணைப்பு வீரா் தங்கபாண்டியன் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.

அவா்கள் வருவதற்கு சற்றுநேரத்துக்கு முன்பு கடலை மிட்டாய் உற்பத்தி கூடத்தில் இருந்த சமையல் எரிவாயு உருளை பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் சுவரை உடைத்துக் கொண்டு அருகில் உள்ள வயல்வெளியில் உடைந்த சிலிண்டா் விழுந்தது. இதனால் கட்டடத்தின் மாடி படிக்கட்டுகளும், அருகில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் கூரையும் சேதமடைந்தது.

இதற்கிடையே முதல்தளத்தில் இருந்த சுப்பிரமணியின் குடும்பத்தினா் 7 பேரும் புகைமூட்டத்தில் சிக்கித் தவித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள், சுமாா் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்து, புகைமூட்டத்தில் சிக்கிய 7 பேரையும் மீட்டனா்.

கடலை மிட்டாய் தயாரிப்புக்கான பாகு கெட்டித்தன்மை இல்லாமல் இருப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அனலில், மரத்துகள்கள் விழுந்து தீப் பிடித்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனா். தீ விபத்து குறித்து தீயனைப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.