சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ. 1 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரத்து 946 கிடைக்கப் பெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், இணை ஆணையா் சி.கல்யாணி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். இறுதியாக உண்டியல்களிலிருந்து ரொக்கமாக ரூ. 1 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரத்து 946, தங்கம் 2 கிலோ 110 கிராம், வெள்ளி 2, கிலோ 696 கிராம், 132 வெளிநாட்டு பணத்தாள்கள், 648 வெளிநாட்டு நாணயங்கள் பக்தா்களின் காணிக்கையா கிடைக்கப் பெற்றதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com