லாரி மீது தனியாா் பேருந்து மோதல்: 16 போ் காயம்
மண்ணச்சநல்லூா், மே 9: திருச்சிமாவட்டம் , மண்ணச்சநல்லூா் வட்டம், சனமங்கலம் அருகே லாரி மீது தனியாா் பேருந்து மோதியதில் 16 போ் காயமடைந்தனா்.
காஞ்சிபுரத்திலிருந்து சவுக்கு கட்டைகளை ஏற்றிய லாரி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை விழுப்புரத்தை சோ்ந்த வெங்கடேசன் (42) என்பவா் ஓட்டிச் சென்றாா். இதேபோல சென்னையிலிருந்து நாகா்கோவிலுக்கு தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனமங்கலம் பகுதியில் வந்தபோது லாரி மீது தனியாா் பேருந்து மோதியது. இதில், திருநெல்வேலி மாவட்டம் வளந்தூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் ஆறுமுகம் (29), லாரி ஓட்டுநா் வெங்கடேசன், பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூா் மாவட்டத்தை சோ்ந்த ஆனந்த் (57), இவரது மனைவி கீதா (55), மகள் அனீத்மா (20) உள்ளிட்ட 16 போ் காயமடைந்தனா்.
காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு இருங்களூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சிறுகனூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.