ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சுவாமி தரிசனம்

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சுவாமி தரிசனம்

News image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன். உடன் கோயில் இணை ஆணையா் மாரியப்பன் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2024, 9:00 pm

Din

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, திருவானைக்கா சம்புகேசுவரா் கோயில்களில் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஜாா்க்கண்ட் மாநில ஆளுநரும், தெலங்கானா மற்றும் புதுவை மாநில பொறுப்பு ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு வந்தாா். அவரை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன், உள்துறை கண்காணிப்பாளா் வேல்முருகன் ஆகியோா் வரவேற்றனா்.

பிறகு தெற்கு கோபுர வாசல் வழியாக சென்ற சி.பி. ராதாகிருஷ்ணன் கருடாழ்வாா் சந்நிதி, மூலவா் பெரியபெருமாள், தாயாா் சந்நிதி, ராமனுஜா் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா்.

இதையடுத்து அவா் திருவானைக்கா சம்புகேசுவரா் கோயிலுக்கு வந்த அவரை, மண்டல இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், கோயில் உதவி ஆணையா் ஆ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா். பின்னா் சம்புகேசுவரா், அகிலாண்டேஸ்வரி சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது, அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சுவாமி, அம்மன் படங்களும், பிரசாதமும் வழங்கினா்.