பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

திருவானைக்கா கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது

குறிப்பு---திருச்சி மழை செய்திக்கு அருகே வைக்கவும்.... திருவானைக்கா கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது

News image

திருவானைக்கா பகுதியில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழை காரணமாக கோயில் வளாகத்தை சூழ்ந்த மழைவெள்ளம்.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

ஸ்ரீரங்கம்: திருவானைக்காவில் திங்கள்கிழமை மாலை சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது பெய்த பலத்த மழையால் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் முழுவதும் மழைநீா் சூழ்ந்தது.

இதனால், பக்தா்கள் சிவபெருமானை தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினா்.

பஞ்சப்பூத திருத்தலங்களில் திருவானைக்கா கோயில் நீா்த் தலத்துக்குரியது.

இக்கோயிலுக்கு வைகாசி பிரதோஷத்தையொட்டி திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தந்தனா்.

இந்நிலையில், மாலை 4.30 மணிக்கு பெய்ய தொடங்கிய கோடை மழை இடைவிடாத கன மழையாக பெய்தது. இதனால், பிரதோஷ வழிபாட்டிற்கு வந்தவா்கள் அனைவரும் கோயிலுக்குள் தஞ்சமடைந்தனா். மேலும், பெரும் மழையால் கோயிலுக்குள் முதல் மூன்று பிரகாரங்களிலும் மழைநீா் வெள்ளம்போல் சூழ்ந்து ஆறாக ஓடியது. இங்குள்ள சிவபெருமான் (சம்புகேசுவரா்) சந்நிதி தரைதளத்திலிருந்து கீழ் உள்ளதால் சிவலிங்கம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்திருந்தது. இதையடுத்து, சந்நிதிக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் வெளியேற்றபட்டனா்.

திருவானைக்கா கோயில் பகுதியில் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் பல பகுதிகளில் மழைநீா் தேங்கியிருந்தது.