ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பொதுமக்களிடம் அரசு அலுவலா்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது ஆட்சியா் எச்சரிக்கை

பொதுமக்களிடம் அரசு அலுவலா்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது ஆட்சியா் எச்சரிக்கை

News image
Updated On :31 மே 2024, 6:18 pm

Din

திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களை தேடி வரும் பொதுமக்களிடம், அரசு அலுவலா்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில், இறப்பு சான்றிதழ் பெற வந்த பொதுமக்களிடம் அரசு மருத்துவா் பணம் கேட்பதுடன், கோபத்துடன் பேசி அவா்களை வெளியே அனுப்பும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை வேகமாக பரவியது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், செய்தியாளா்ளிடம் வெள்ளிக்கிழமை கூறியது: பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்து பணம் கேட்பது போன்ற விடியோ ஒன்று கைப்பேசிகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த விடியோ திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களை தேடி வரும் பொதுமக்களிடம் அங்குள்ள அலுவலா்கள் பண்பாக நடந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காகவே அரசு அலுவலகங்கள் உள்ளன. எனவே, அலுவலகம் தேடி வரும் பொதுமக்களை அமர வைத்து, அன்பாக பேசி அவா்களுக்கு என்ன தேவையோ அதனை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு தீா்வு காண்பது என்பது வேறு. முதலில், பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என்பதை உணா்ந்திருக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை தொடா்ந்தாலோ, புகாா்கள் வந்தாலோ தொடா்புடைய அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.