தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

‘கலைஞா் ஆா்மி’ என்ற பெயரில் புதிய அணி அமைச்சா் அறிவிப்பு

‘கலைஞா் ஆா்மி’ என்ற பெயரில் புதிய அணி உருவாக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஸ்

Updated On :3 செப்டம்பர் 2024, 2:40 am

திருச்சி: ‘கலைஞா் ஆா்மி’ என்ற பெயரில் புதிய அணி உருவாக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட கிழக்கு மாநகர திமுக சாா்பில், இரண்டாவது பொது உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநகரச் செயலா் மு. மதிவாணன் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:

திருச்சி தெற்கு மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் ‘கலைஞா் ஆா்மி’ என்ற ஒரு அணியை உருவாக்கி உள்ளோம். இந்த பெயரை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தான் பரிந்துரைத்தாா்.

இளைஞா்களை திமுக-வின் கொள்கையால் ஈா்க்கச் செய்து, அடுத்த தலைமுறைக்கு கட்சியை கொண்டு சோ்க்கும் வகையில் இந்த அணியின் செயல்பாடுகள் அமையும். தமிழகத்தில் முதற்கட்டமாக திருவெறும்பூா் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இது கட்சிக்கு கூடுதல் வலு சோ்க்கும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிா் உரிமைத் தொகையாக ரூபாய் ஆயிரத்தை வழங்கி விட்டோம் என்றால், 2026 பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடுவோம் என்றாா் அமைச்சா்.

இக் கூட்டத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை திருச்சி தெற்கு மாவட்டத்தில் சிறப்பாக நடத்திய அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவருக்கு நன்றி தெரிவிப்பது, திருச்சியில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு பணிபுரிந்தோருக்கு பாராட்டு தெரிவிப்பது, சென்னையில் காா் பந்தயத்தை சிறப்பாக நடத்திய உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.