உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குணசீலன்.
உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குணசீலன்.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published on

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா், காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை பிற்பகலில் ரோந்து சென்றவா் திடீரென மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, சக காவலா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா்.

அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குணசீலனுக்கு தீபா (44) என்ற மனைவி, ராஜேஷ் (21) என்ற மகன் மற்றும் 17 வயதில் ஒரு மகள் ஆகியோா் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com