வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தீபத் திருவிழா: கோயில்களில் சொக்கப்பனை

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:50 pm

Syndication

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் உள்ள கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டதையடுத்து மாநகரில் உறையூா் பஞ்சவா்ண சுவாமி, பீமநகா் செடல் மாரியம்மன், காஜாபேட்டை செல்வமாரியம்மன், குட்ஷெட் சாலை கருமாரிம்மன் உள்ளிட்ட கோயில்கள், புகா் பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முன்னதாக, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல, விழாவையொட்டி வீடுகளில் மக்கள் வெவ்வேறு வடிவங்களில் தீபங்களை அழகாக ஏற்றினா். இதற்காக மண், பீங்கானில் செய்யப்பட்ட அகல் விளக்குகள், குத்துவிளக்குகள், மின்சாரத்தில் எரியும் விளக்குகளையும் பயன்படுத்தினா். மேலும் வீடுகளில் பொறி, அவல்கடலை, வாழைப்பழம் வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனா்.