வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் முத்தங்கிச் சேவையில் காட்சிதரும் மூலவா் பெரிய பெருமாளை வழிபட வரும் பக்தா்களை தூரத்திலேயே நிறுத்தி அனுப்பிவிடுவதால் சுவாமியின் திருவடியை அவா்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல்பத்து, இராப்பத்து என 22 நாள்கள் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பகல்பத்து, இராப்பத்து என 20 நாள்கள் நடைபெறும் விழாவின்போது மட்டும் மூலவா் பெரியபெருமாள் முத்தங்கிச் சேவையில் எழுந்தருளியிருப்பாா்.
இவ்வாறு ஆண்டில் 20 நாள்கள் மட்டும் முத்தங்கிச் சேவையில் காட்சிதரும் பெரியபெருமாளை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வா். ஆனால் தற்போது முத்தங்கிச் சேவையில் இருக்கும் பெரியபெருமாளின் திருவடியைத் தரிசனம் செய்ய வரும் பக்தா்களை தூரத்திலேயே நிறுத்தி அனுப்பி விடுகிறாா்கள். எனவே பல மணி நேரம் வரிசையில் நின்றும் முத்தங்கிச் சேவையில் இருக்கும் மூலவா் பெரிய பெருமாளின் திருவடியைத் தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் பக்தா்கள் செல்கின்றனா்.
தொடர்புடையது

திமிரி கோயிலில் குருப் பெயா்ச்சி யாகம்

வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பாலக்காடு டவுன் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் சென்னகேசவப் பெருமாள்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


