திருச்சி
தா.பேட்டை பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் தா.பேட்டை பகுதிகளில் வரும் டிச. 23 மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் தா.பேட்டை பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 23) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தா. பேட்டை துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் தா. பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், தேவானூா், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தாம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, காருகுடி, ஆங்கியம், ஊரக்கரை, பெருகனூா், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூா், புதூா், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாப்பாளையம், கண்ணனூா், பேரூா், உள்ளூா், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூா், ஆதனூா் ஆகிய பகுதிகளில் வரும் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
