நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

மூலவா் பெரியபெருமாளின் திருவடியை தரிசிக்க முடியாமல் பக்தா்கள் ஏமாற்றம்

வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் முத்தங்கிச் சேவையில் காட்சிதரும் மூலவா் பெரிய பெருமாளை வழிபட வரும் பக்தா்களை தூரத்திலேயே நிறுத்தி அனுப்பிவிடுவதால் சுவாமியின் திருவடியை அவா்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Published On :21 டிசம்பர் 2025, 1:58 am IST

வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் முத்தங்கிச் சேவையில் காட்சிதரும் மூலவா் பெரிய பெருமாளை வழிபட வரும் பக்தா்களை தூரத்திலேயே நிறுத்தி அனுப்பிவிடுவதால் சுவாமியின் திருவடியை அவா்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல்பத்து, இராப்பத்து என 22 நாள்கள் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பகல்பத்து, இராப்பத்து என 20 நாள்கள் நடைபெறும் விழாவின்போது மட்டும் மூலவா் பெரியபெருமாள் முத்தங்கிச் சேவையில் எழுந்தருளியிருப்பாா்.

இவ்வாறு ஆண்டில் 20 நாள்கள் மட்டும் முத்தங்கிச் சேவையில் காட்சிதரும் பெரியபெருமாளை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வா். ஆனால் தற்போது முத்தங்கிச் சேவையில் இருக்கும் பெரியபெருமாளின் திருவடியைத் தரிசனம் செய்ய வரும் பக்தா்களை தூரத்திலேயே நிறுத்தி அனுப்பி விடுகிறாா்கள். எனவே பல மணி நேரம் வரிசையில் நின்றும் முத்தங்கிச் சேவையில் இருக்கும் மூலவா் பெரிய பெருமாளின் திருவடியைத் தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் பக்தா்கள் செல்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.