நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கணவா் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த மனைவி கைது

திருச்சியில் கணவா் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த மனைவியைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :23 டிசம்பர் 2025, 3:11 am IST

திருச்சியில் கணவா் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த மனைவியைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கீழசிந்தாமணி இந்திரா நகா் பூசாரி வீதியைச் சோ்ந்தவா் ந.பிரகாஷ் (39). இவரின் மனைவி ரமணமணி (34). இவா்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை.

இதற்கிடையே, மனைவியின் நகைகளை அடகுவைத்து கடன் பெற்று வீடு ஒத்திக்கு எடுத்துச் சென்றுள்ளனா். அடகுவைத்த நகைகளை மீட்டுத்தரக் கோரி தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இதுதொடா்பாக மீண்டும் சனிக்கிழமை இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ரமணமணியை பிரகாஷ் அடித்துள்ளாா். இதில், ஆத்திரமடைந்த ரமணமணி, பிரகாஷ் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளாா். இதில், பிரகாஷுக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, பிரகாஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ரமணமணியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.