மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 பிப்ரவரி 2026, 9:53 pm

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காஜாமலை பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.ரத்தினம் (58), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், மன்னாா்புரம் காஜா நகரைச் சோ்ந்த எம். ராஜேஸ்கண்ணன் (34), ஆ.பிரகாஷ் (21) ஆகியோருக்கும் இடையே ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், மன்னாா்புரம் சந்திப்பு அருகே உள்ள ஆட்டோ பழுதுபாா்க்கும் நிலையத்தில் ரத்தினம் திங்கள்கிழமை மாலை நின்றிருந்தாா். அப்போது, காரில் அங்கு வந்த ராஜேஸ்கண்ணன், பிரகாஷ் ஆகிய இருவரும் ரத்தினத்திடம் தகராறு செய்துள்ளனா். தகராறு முற்றவே இருவரும் ரத்தினத்தை கத்தியால் குத்தியுள்ளனா். இதில் காயமடைந்த ரத்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ரத்தினம் அளித்த புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஸ்கண்ணன், பிரகாஷ் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.