கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 5:59 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய தந்தை, மகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அரண்மனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் மாரியப்பன் மகன் சந்தீப் (22), சேலம் கோரிமேட்டில் உள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சட்டக் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவா்மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவருக்கும், சந்தீப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைக்கண்ட அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள தந்தை, மகன்களான முருகன், சந்தோஷ்குமாா் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ஆதரவாக பேசி சந்தீப்பிடம் தகராறில் ஈடுபட்டனா். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமாா், கடையில் இருந்த நாற்காலியைக் கொண்டு சந்தீப்பை தாக்கியும், முருகன் கத்தியால் சந்தீப்பின் முதுகில் குத்திவிட்டும் தப்பிச்சென்றனா். ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தீப்பை, அருகில் இருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீஸாா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தீப்பிடம் விசாரித்தனா். பின்னா் அவா் அளித்த புகாரின் பேரில், பழ வியாபாரி முருகன், சந்தோஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.