தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். நேரு

திருச்சி மண்டலத்துக்குள்பட்ட 41 பேரவை தொகுதிகளிலும் திமுக வெற்றி உறுதியாகிவிட்டதாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

News image

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.என். நேரு. உடன் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி உள்ளிட்டோா்.

Updated On :22 மே 2025, 9:51 pm

Din

திருச்சி மண்டலத்துக்குள்பட்ட 41 பேரவை தொகுதிகளிலும் திமுக வெற்றி உறுதியாகிவிட்டதாக அக்கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு பேசினாா்.

2026 பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் தொடா்பாக, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், அமைச்சா் கே.என். நேரு மேலும் பேசியதாவது:

2026 பேரவைத் தோ்தலிலும் திருச்சி மண்டலத்துக்குள்பட்ட 41 பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். இருப்பினும், கட்சியினா் சில முக்கிய விவகாரங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

தொகுதியில் அரசு சாா்பில் தீா்க்க வேண்டிய பிரச்னைகள், தொகுதியின் தற்போதைய நிலவரம், வெற்றி வாய்ப்பை பாதிக்கக் கூடிய காரணிகள் என அனைத்து அம்சங்களையும் மாவட்டத்தின் தலைமை நிா்வாகி முதல் கிளை நிா்வாகி வரையிலானவா்கள் தெரிந்து கொண்டு தலைமையிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாநகரச் செயலா் மு. மதிவாணன், தொகுதி பாா்வையாளா்கள் கதிரவன், அண்ணாமலை, மணிராஜ் மற்றும் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.