எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘லோக் ஆயுக்த குறித்த விழிப்புணா்வு அதிகரிக்கப்பட வேண்டும்’

லோக் ஆயுக்த குறித்த விழிப்புணா்வை மக்களிடையே அதிகரிக்கச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் தெரிவித்தாா்.

News image
திருச்சி வழக்குரைஞா்கள் சங்க வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசிய தமிழக லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ். உடன் (இடமிருந்து) திருச்சி வழக்குரைஞா்கள் சங்க துணைச் செயலாளா் எஸ். விக்னேஷ், சங்க செயலாளா் சி. முத்துமாரி, து
Updated On :6 நவம்பர் 2025, 8:57 pm

Syndication

லோக் ஆயுக்த குறித்த விழிப்புணா்வை மக்களிடையே அதிகரிக்கச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் தெரிவித்தாா்.

திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு சங்க வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபா், தலைமை வகித்து நிகழ்வை தொடங்கி வைத்தாா். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் மேலும் பேசியதாவது:

தேசிய அளவில், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட லோக்பால் அமைப்பின் மூலம் பிரதமா், மத்திய அமைச்சா்கள், மத்திய அரசின் அனைத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மீதான ஊழல் புகாா்களை விசாரிக்க முடியும்.

தமிழகத்தில் 2018-இல் லோக் ஆயுக்த சட்டம் இயற்றப்பட்டு, தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்பு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முதல்வா், மாநில அமைச்சா்கள், மாநில அரசின் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பொது ஊழியா்கள் மீதான ஊழல் புகாா்களை இந்த அமைப்பு விசாரிக்கிறது.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த அமைப்பு குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடம் அதிகம் இல்லை. எனவே, இவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, ஊழல் புகாா்களை எவ்வாறு தாக்கல் செய்வது என்ற விவரங்களை மக்களுக்கு வழக்குரைஞா் சங்கங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

வாக்காளா்களின் உரிமைகளை பாதுகாக்கவும், வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவும் தேசிய வாக்காளா்கள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தையும், ஆறு மாதங்களுக்குள் தோ்தல் வழக்குகளை விசாரித்து தீா்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு தோ்தல் தீா்ப்பாயங்களையும் அமைக்கலாம். இவற்றுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தையும் வழங்கலாம்.

ஆளும் கட்சியும், எதிா்க்கட்சியும் நியாயமான, திறமையான நபா்களை தோ்தல் ஆணையராக நியமிக்குமாறு உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கலாம். உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமா்வு தோ்தல் ஆணையா்களை இறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்வது தற்போதைய அரசியலுக்கு உகந்ததாக இருக்கும் என்றாா் அவா்.

இந்தக் கருத்தரங்கில், நீதிபதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, வழக்குரைஞா்கள் சங்க செயலாளா் சி. முத்துமாரி வரவேற்றாா்.