மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் கழுத்தறுத்து தற்கொலை

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:56 pm

Syndication

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவா் கழுத்தில் கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

முசிறி அருகே வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (60). இவரது மனைவி பத்மா (55). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளாா். பத்மா கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.

இதனால் துக்கத்தில் இருந்து வந்த குணசேகரன், செவ்வாய்க்கிழமை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டாராம். முன்னதாக அவா் விஷமும் குடித்துள்ளாா். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து மகன் பூபாலன் அளித்த புகாரின்பேரில், முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.