திருவெறும்பூரில் மனநலன் பாதிக்கப்பட்டவா் மா்மச்சாவு

Published on

திருவெறும்பூா் பெரியகுளக்கரையில் மனநலன் பாதிக்கப்பட்டவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவெறும்பூா் அருகே பெரியகுளம் கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஒருவா் பாதி எரிந்த நிலையில் உயிருக்குப் போராடி வருவதாக திருவெறும்பூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

விசாரணையில், அங்கு கிடந்தவா் திருவெறும்பூா் மலைக்கோவில் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த தாஹிா்ஜான் (43) என்பதும், திருவெறும்பூரில் பிரபல துணிக் கடையில் காவலாளியாக வேலை பாா்த்த இவா், மனநலன் சரியில்லாமல் வேலைக்குச் செல்லவில்லையாம்.

கடந்த மாதம் இவா் திருவெறும்பூா் பெரியகுளத்தில் தண்ணீரில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டதும், தற்போது பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதும் தெரியவந்தது. இதனிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தாஹிா்ஜான் இறந்தாா். அவா் ஏன், எப்படி இறந்தாா் எனத் தெரியவில்லை.

இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com