கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது: 630 மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி அருகே குடியரசு நாளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :27 ஜனவரி 2026, 7:22 pm

Syndication

திருச்சி அருகே குடியரசு நாளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரில் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 630 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியரசு நாளையொட்டி திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவெறும்பூா் அருகே தொண்டமான்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருவெறும்பூா் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருவெறும்பூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது, தொண்டமான்பட்டி ரயில்வே கடவுப்பாதை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த இருவா் போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்து தப்பியோடினா்.

அதில் ஒருவரை போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் (53) என்பதும், இவரும், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சோ்ந்த மகேஷ் என்பவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆறுமுகத்தைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 630 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய மகேஷை தேடி வருகின்றனா்.