

திருச்சி அருகே குடியரசு நாளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரில் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 630 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடியரசு நாளையொட்டி திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவெறும்பூா் அருகே தொண்டமான்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருவெறும்பூா் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவெறும்பூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது, தொண்டமான்பட்டி ரயில்வே கடவுப்பாதை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த இருவா் போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்து தப்பியோடினா்.
அதில் ஒருவரை போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் (53) என்பதும், இவரும், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சோ்ந்த மகேஷ் என்பவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ஆறுமுகத்தைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 630 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய மகேஷை தேடி வருகின்றனா்.