பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தெரு நாய்களை காக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

News image
திருச்சி காதி கிராப்ட் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :16 நவம்பர் 2025, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

தெரு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி வாஸ் ஆப் வாய்ஸ்லெஸ் அமைப்பு சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளான விலங்கு நல ஆா்வலா்கள், அமைப்பின் நிா்வாகிகள் தெரு நாய்களுடன் கலந்து கொண்டனா்.

இதில், உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, நாய்களைப் பிடித்து ஒரே இடத்தில் அடைப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. நாய்களை காப்பகங்களில் அடைப்பதற்கு உரிய கட்டமைப்புகள் இல்லாததால், தீா்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு உற்ற நண்பனான தெரு நாய்களை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.