ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றவா் கைது

திருச்சி பொன்மலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 10:30 pm

Syndication

திருச்சி பொன்மலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொன்மலை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொன்மலைபட்டி சாய்பாபா கோயில் அருகே போலீஸாா் திங்கள்கிழமை மாலை வாகன சோதனை மேற்கொண்டனா். அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றது பொன்மலைப்பட்டி உடையாா் வீதியைச் சோ்ந்த வி.செல்வராஜ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 48 போதை மாத்திரைகள், 2 ஊசிகள், ஒரு சலைன் பாட்டில், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.