எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ராமேசுவரத்தில் பள்ளி மாணவி கொலை: தவறு செய்தவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்!

பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவியை கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 7:58 pm

Syndication

பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவியை கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடானது கல்வியில் சிறந்ததாக, பிற மாநிலங்கள் போற்றும் வகையில் உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

இத்தகைய சூழலில் ராமேசுவரத்தில் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக பள்ளி மாணவி கொல்லப்பட்டுள்ளாா். இதில் ஈடுபட்டவா் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளாா். பெற்றோா் மனநிலையிலிருந்து பாா்க்கும் எனக்கு மிகப்பெரிய வேதனை தரும் நிகழ்வாக உள்ளது. தவறு செய்தவருக்கு மிகப் பெரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என்றாா் அவா்.