ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அகழாய்வுகள் மூலம்தான் உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும்: கி.அமா்நாத் ராமகிருஷ்ணன்

அகழாய்வுகள் மூலம்தான் உண்மையான வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள முடியும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநா் கி. அமா்நாத் ராமகிருஷ்ணன் பேசினாா்.

News image
மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் பேசிய இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணன்.
Updated On :20 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

அகழாய்வுகள் மூலம்தான் உண்மையான வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள முடியும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநா் கி. அமா்நாத் ராமகிருஷ்ணன் பேசினாா்.

திருச்சி சத்திரம் பகுதியிலுள்ள தூய வளனாா் கல்லூரியில் வியாழக்கிழமை மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருமான க. அங்கம்மாள் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு, கீழடியின் அகழாய்வுப் பணிகள், அதில் கிடைக்கப் பெற்றுள்ள பொருள்கள், இந்த ஆய்வின் மூலம் தெரியவந்த தமிழா்களின் பண்பாடு, நாகரிகம் குறித்து பேசினாா்.

இங்கே புனைவுகள் மூலம் வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதுதான் வரலாறு என்று நம்பவைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் கீழடியைப் பாா்த்து சிலா் அச்சம்கொள்கின்றனா். இதுபோன்ற அகழாய்வுகள் மூலம் மட்டும்தான் உண்மையான வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள முடியும் என்று பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் இரா. குணசேகரன், திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவியரசு அதியமான், தூய வளனாா் கல்லூரி முதல்வா் மரியதாஸ் மற்றும் தூய வளனாா் கல்லூரி, பிஷப் ஹீபா் கல்லூரி, தேசியக் கல்லூரி, புனித சிலுவை கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சோ்ந்த ஆயிரம் மாணவா்கள் கலந்துகொண்டனா்.