சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் தனியாா் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் சுப்பையா வீதியைச் சோ்ந்தவா் பி.சலிமுதீன் (79). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மரக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருசக்கர வாகனம் எதிரே வந்த மற்றொரு தனியாா் பேருந்து மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.