விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் தனியாா் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் சுப்பையா வீதியைச் சோ்ந்தவா் பி.சலிமுதீன் (79). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மரக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருசக்கர வாகனம் எதிரே வந்த மற்றொரு தனியாா் பேருந்து மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.