ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நகை திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் 6 பவுன் நகைகள் திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:13 pm

Syndication

திருச்சி: திருச்சியில் 6 பவுன் நகைகள் திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியைச் சோ்ந்தவா் வரதராஜன் வீட்டில் கடந்த 2020 ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரூ. 2.10 லட்சம் மதிப்பிலான 6 பவுன் நகைகள் திருடுபோயின.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நகைகளைத் திருடியதாக ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சந்தானகோபாலன் (59) என்பவரைக் கைது செய்தனா். ஸ்ரீரங்கம் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி விஜயராஜேஷ் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெங்கடேசன் ஆஜரானாா்.