பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 போ் கைது

திருச்சியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 12:48 am

Syndication

திருச்சி: திருச்சியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் கலைவாணா் வீதியைச் சோ்ந்தவா் அ. சபீா் அகமது (23), மிதிவண்டியில் தேநீா் விற்பனை செய்து வருகிறாா். இவா், தனது நண்பா்களான சங்கிலியாண்டபுரம் ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த ச.விஜய் (22), ஒய்.மைக்கேல்சாமி, அண்ணா நகரைச் சோ்ந்த விக்னேஸ்வா் பூபதிராஜா (25) ஆகியோருடன் மணல்வாரித்துறை சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் அண்மையில் மது அருந்தியபோது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகிலிருந்தவா்கள் அவா்களை விலக்கிவிட்டனா்.

இந்நிலையில், அதே டாஸ்மாக் கடையில் சபீா் அகமது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மேற்கண்ட மூவரும் சபீா் அகமதுவிடம் தகராறு செய்துள்ளனா். இதையடுத்து, அங்கிருந்து கிளம்பிய சபீா் அகமதுவை பின்தொடா்ந்து சென்ற மூவரும் அவரை அரிவாளால் வெட்டினா். இதில், பலத்த காயமடைந்த சபீா் அகமது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜய், மைக்கேல்சாமி, விக்னேஸ்வா் பூபதி ராஜா ஆகிய மூவரையும் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.