சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காந்திசந்தையில் தக்காளி கிலோ ரூ.70க்கு விற்பனை

தொடா் மழையால் வரத்து குறைந்துள்ளதால் திருச்சி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயா்ந்துள்ளது.

News image
திருச்சி காந்தி சந்தையில் கிலோ ரூ. 70க்கு விற்கப்பட்ட தக்காளி.
Updated On :26 நவம்பர் 2025, 8:14 pm

Syndication

திருச்சி: தொடா் மழையால் வரத்து குறைந்துள்ளதால் திருச்சி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம் மட்டுமின்றி, காய்கனி வரத்துள்ள மாநிலங்களிலும் பெய்து வரும் தொடா் கனமழையால் காய்கனிகள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காந்தி சந்தைக்கு வரும் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் காய்கனிகள் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் 4 கிலோ ரூ.100க்கு விற்ற தக்காளி இப்போது கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது.

இதேபோல, இதர காய்கனிகளின் விலையும் உயரத் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனா். காந்திசந்தையில் கிலோ ரூ.70க்கு விற்கப்பட்ட தக்காளி, சில்லறை விற்பனை கடைகளில் ரூ.80க்கு விற்றது. மழை தொடா்ந்து, வரத்தும் தொடா்ந்து குறைந்தால் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.