அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

திருச்சி மாவட்ட ஊரகப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற ஒரு பெண் உள்பட 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:52 pm

Syndication

திருச்சி மாவட்ட ஊரகப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற ஒரு பெண் உள்பட 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய சிறப்பு சோதனையில் ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற நவலூா் குட்டப்பட்டு பாரதி நகா் ஆ. ரோஸ்லின் சவரியம்மாள் (46), வண்ணான்கோயில் பாரதி நகா் ரா. தன்ராஜ் (59), கரூா் மாவட்டம், குளித்தலை காவல்காரன்பட்டி ந. செல்வகுமாா் (40) ஆகிய மூவரையும் கைது செய்து, ரூ.1.35 லட்சம் மதிப்புள்ள 92 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல திருவெறும்பூா் பகுதியில் காட்டூா் ஸ்ரீராம் நகா் வி. நகுலன் (59), காட்டூா் குறிஞ்சி நகா் காா்த்திகேயன் (44) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், 53 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

துவரங்குகுறிச்சி பகுதியில் மருங்காபுரி கஞ்நாயக்கன்பட்டி அ. பொன்ராம் (55), துவாக்குடி பகுதியில் பழங்கனாங்குடி மாதா கோயில் தெரு தே. சுரேஷ்குமாா் (39) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், 50 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.