திருச்சி
வாய்க்காலில் லாரி கவிழ்ந்து விபத்து
திருச்சி மாவட்டம், சிலையாத்தி பகுதியில் வாய்க்காலில் லாரி புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருச்சி மாவட்டம், சிலையாத்தி பகுதியில் வாய்க்காலில் லாரி புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருச்சியிலிருந்து சேலம் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற லாரியானது திருச்சி - சேலம் நெடுஞ்சாலை சிலையாத்தி பகுதியில் சென்றபோது திடீரென சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் சிறிய காயங்களுடன் தப்பினாா். தகவலறிந்த வாத்தலை காவல்துறையினா் இரண்டு ராட்சத கிரேன் உதவியுடன் லாரியை மீட்டு அப்புறப்படுத்தினா்.
