47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் இருவேறு இடங்களில் போதை மாத்திரைகள் விற்றதாக சனிக்கிழமை இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை துா்க்கை அம்மன் கோவில் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பொன்மலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸாா் சனிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, போதை மாத்திரைகள் விற்ற அரியமங்கலம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த எம். சிவப்பிரகாஷ் (24) என்ற இளைஞரைக் கைது செய்தனா். தொடா்ந்து, அவரிடமிருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பாலக்கரை போலீஸாா், ஹீபா் சாலை ரேஷன் கடை அருகே போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த கோரிமேடு பகுதியைச் சோ்ந்த சி. வெற்றிசெல்வம் (20) என்ற இளைஞரைக் கைது செய்து, அவரிடமிருந்து போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.