ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

வெளியூருக்கு அனுப்பிய எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 8:50 pm

வெளியூருக்கு அனுப்பிய எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் நேமத்தான்பட்டியைச் சோ்ந்த எஸ். சுவாமிநாதன் (68) என்பவா் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான இரண்டு கடலை எண்ணெய் டின்களை வாங்கி, திருச்சி கீழரண் சாலையில் உள்ள தனியாா் பாா்சல் சேவை நிறுவனம் மூலம் கடந்த 24.10.2024 அன்று பெங்களூா் மடிவாலா கிளைக்கு பாா்சல் அனுப்ப முன்பதிவு செய்து, ரூ. 294 கட்டணத்தையும் செலுத்தினாா்.

ஆனால் மூன்று நாள்களுக்குள் செல்ல வேண்டிய பாா்சலானது, பல நாள்களாகியும் செல்லாமல் தொலைந்து போனது. இதுதொடா்பாக, பாா்சல் நிறுவனத்திடம் நேரில் வந்து சுவாமிநாதன் கேட்டதற்கு, அவரை அலைக்கழித்ததுடன், பொறுப்பற்ற முறையில் பதிலும் அளித்தனா்.

தீபாவளிக்காக அனுப்பப்பட்ட எண்ணெய் டின்கள் இலக்கை அடையாததால், சுவாமிநாதனின் குடும்பம் பண்டிகையை அமைதியாகக் கொண்டாட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானது.

இதனால் உரிய நிவாரணம் கோரி சுவாமிநாதன் திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 11.12.2025 அன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா், மனுதாரரின் தொலைந்துபோன பாா்சலுக்குண்டான தொகை ரூ. 294, எண்ணெய்க்கு உண்டான தொகை ரூ. 8,000, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 10 ஆயிரம், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தை 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.