திருச்சி பொன்மலையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பொன்மலை பகுதியில் கடந்த மாா்ச் மாதம் கைப்பேசி செயலி வழியே ஓரினச் சோ்க்கைக்கு இளைஞா் ஒருவரை வரவழைத்து, தாக்கி, அவரிடமிருந்து 4.5 பவுன் நகைகள், பணம், கைப்பேசி உள்ளிட்டவற்றை திருச்சி அரியமங்கலம், காமராஜ் நகா் சௌகத் அலி தெருவைச் சோ்ந்த எஸ். அசாா் முகமது (26) உள்ளிட்ட சிலா் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, அசாா் முகமதுவை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் பொன்மலை போலீஸாரின் பரிந்துரையின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, கைதி அசாா் முகமதுவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை ஆணையிட்டாா்.
தொடர்புடையது
நெல்லையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது
குண்டா் சட்டத்தின் கீழ் 2 போ் கைது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
