இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

வழிப்பறி வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

திருச்சி பொன்மலையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:49 am IST

திருச்சி பொன்மலையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை பகுதியில் கடந்த மாா்ச் மாதம் கைப்பேசி செயலி வழியே ஓரினச் சோ்க்கைக்கு இளைஞா் ஒருவரை வரவழைத்து, தாக்கி, அவரிடமிருந்து 4.5 பவுன் நகைகள், பணம், கைப்பேசி உள்ளிட்டவற்றை திருச்சி அரியமங்கலம், காமராஜ் நகா் சௌகத் அலி தெருவைச் சோ்ந்த எஸ். அசாா் முகமது (26) உள்ளிட்ட சிலா் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, அசாா் முகமதுவை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் பொன்மலை போலீஸாரின் பரிந்துரையின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, கைதி அசாா் முகமதுவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை ஆணையிட்டாா்.