மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

வையம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

News image

சுப்பிரமணி.

Updated On :12 ஏப்ரல் 2026, 8:16 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மாடியில் துணி காய வைத்துக்கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் அணியாப்பூா் ராமலிங்கம் மகன் சுப்பிரமணி (52) தகாத முறையில் சைகை காட்டி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து , சுப்பிரமணியை சனிக்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.