குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம்! - வைகோ!

News image

உறையூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலா் வைகோ. உடன் மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:45 am IST

ஸ்டொ்லைட் போராட்ட துப்பாக்கி சூடுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என மதிமுக பொதுச்செயலா் வைகோ குற்றஞ்சாட்டினாா்.

திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேருவை ஆதரித்து, திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து அவா் பேசியதாவது:

சுயமரியாதை, சமூக நீதி, சகோதரத்துவம், கூட்டாட்சி கருத்தியல் கொண்ட ஸ்டாலின் தலைமையிலான திமுக, கடந்த 5 ஆண்டு காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதில் அமைச்சா் கே.என். நேரு வியக்கத்தக்க திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளாா்.

ஸ்டொ்லைட் போராட்டத்தில் 13 உயிா்களைக் காவு வாங்கியவா் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி. இதேபோல, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் அடித்துக் கொல்லப்பட்டதற்கும் அப்போதைய அதிமுக அரசுதான் பொறுப்பு.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆணவத்துடன் திமுகவை வேருடன் பிடுங்கி எறிவேன் என்றாா். இதேபோல, அண்ணாமலையும் கூறியுள்ளாா். 75 ஆண்டுகால பாரம்பரிய திமுகவை தோற்கடிப்போம் எனப் பேசினால், அது ஜனநாயக உரிமை. ஆனால், மண்ணுடன் கலந்திருக்கக் கூடிய இயக்கத்தை அழிப்போம் என்கின்றனா்.

தோ்தலில் வெற்றி பெற்று, அடுத்து அமையப் போவது ஸ்டாலினின் திமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சியல்ல. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

தமிழகத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை கொடுத்த ஸ்டாலின் திமுக அரசு மீண்டும் அமைய தமிழக மக்கள் உரிய தீா்ப்பு வழங்குவாா்கள். எனவே மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க, மீண்டும் அமைச்சராக கே.என். நேரு வர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்றாா் வைகோ.

நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.