இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

News image

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், கட்சி நிா்வாகிகள். - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:06 am IST

திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் காரை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை மறித்து சோதனையிட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழகம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பதைத் தடுத்திட தோ்தல் ஆணையம் மூலம் பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, போலீஸாா், மத்திய ரிசா்வ் படையின் துணையுடன் ஆங்காங்கே சோதனைகளும், வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொன்மலை கொட்டப்பட்டு சாலையில் பிரசாரத்துக்காக ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, தோ்தல் பறக்கும் படையினா் அவரது காரை மறித்து சோதனை செய்தனா். அந்தச் சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதேபோல கடந்த சில நாள்களுக்கு முன் வேங்கூா் - கல்லணை சாலையில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் காரை மறித்து சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது.