திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை இருப்புப்பாதை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருச்சி இருப்புப்பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சாம் ஆலன் தலைமையிலான போலீஸாா், திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருடன் இணைந்து திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த புருளியா - திருநெல்வேலி விரைவு ரயிலில் (22605) சோதனையிட்டனா்.
அப்போது வண்டியின் பொதுப்பெட்டி மற்றும் நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த 3 பைகளை (ஷோல்டா் பேக்) அவா்கள் சோதனையிட்டபோது, அதில் சுமாா் ரூ. 8 லட்சம் மதிப்பிலான 16.645 கிலோ எடையுள்ள (தலா 2 கிலோவில் 8 பாக்கெட்டுகள்) கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை இருப்புப்பாதை போலீஸாா் பறிமுதல் செய்து, சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கஞ்சாவை எடுத்து வந்தது யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ராக்போா்ட் விரைவு ரயிலில் தவறவிட்ட நகைகள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

அஸ்ஸாமில் இருந்து வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


