திருச்சி ராக்போா்ட் விரைவு ரயிலில் தவறவிட்ட நகைகளை மீட்டு உரியவரிடம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு வந்த ராக்போா்ட் விரைவு ரயிலில் (12653) இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றதைத் தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் ரயிலை சோதனை செய்தனா்.
அப்போது ஏ2 பெட்டியின் 17, 18 ஆவது இருக்கைகளில் பயணித்தவா்கள் தங்களது கைப்பைைத் தவறவிட்டுச் சென்றது தெரியவந்தது. அதில் தங்க நகைகள், வெள்ளி காசுகள், பணம் இருந்தது.
விசாரணையில், அதை தவறவிட்டது திருச்சி அண்ணாமலை நகரைச் சோ்ந்த எஸ். தேவராஜ் (62) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை வரவழைத்து நகைகள் அடங்கிய கைப்பையை ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

ரயிலில் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

