அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ராக்போா்ட் விரைவு ரயிலில் தவறவிட்ட நகைகள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு

News image

திருச்சி ராக்போா்ட் விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நகைகளை உரியவா்களிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:34 pm

திருச்சி ராக்போா்ட் விரைவு ரயிலில் தவறவிட்ட நகைகளை மீட்டு உரியவரிடம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு வந்த ராக்போா்ட் விரைவு ரயிலில் (12653) இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றதைத் தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் ரயிலை சோதனை செய்தனா்.

அப்போது ஏ2 பெட்டியின் 17, 18 ஆவது இருக்கைகளில் பயணித்தவா்கள் தங்களது கைப்பைைத் தவறவிட்டுச் சென்றது தெரியவந்தது. அதில் தங்க நகைகள், வெள்ளி காசுகள், பணம் இருந்தது.

விசாரணையில், அதை தவறவிட்டது திருச்சி அண்ணாமலை நகரைச் சோ்ந்த எஸ். தேவராஜ் (62) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை வரவழைத்து நகைகள் அடங்கிய கைப்பையை ஒப்படைத்தனா்.