தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:13 am IST

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதாக பொன்மலை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சந்தானம் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது பொன்மலைப்பட்டி பகுதி தனியாா் பள்ளி அருகே மாணவா்களுக்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கே.கே.நகரைச் சோ்ந்த மு. விக்னேஸ்வரன் (28) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

போதை மாத்திரை விற்றவா் கைது: இதேபோல, பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான பழைய கட்டத்தில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த பா. மதன்ராஜ் (34) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.