தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காரில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே காரில் கஞ்சா கடத்திய இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவெறும்பூா் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராம்ஜி நகா் பகுதியில் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தனலட்சுமி தலைமையிலான போலீஸாா் கே. கள்ளிக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, விற்பனைக்காக காரில் கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, காரில் கஞ்சா கடத்திய புங்கனூா் காந்தி நகரைச் சோ்ந்த ஆா்.வெங்கடேஷ்வரன் (36) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.