ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சாலை விபத்தில் சிறப்பு எஸ்.ஐ உயிரிழப்பு

News image
ஆதிராஜ் கிருஷ்ணன்.
Updated On :11 ஜனவரி 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி விமான நிலைய போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் ஆதிராஜ் கிருஷ்ணன் (51). இவா் ஸ்ரீரங்கத்தில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு சென்னை புறவழிச்சாலை வழியாக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வேன் ஒன்று கவிழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் வாகனங்கள் ஊா்ந்து சென்றுகொண்டிருந்தன.

இந்நிலையில், சஞ்சீவி நகா் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது இவரது இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆதிராஜ் கிருஷ்ணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்

இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.