அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரசவ இறப்புகள் அதிகரிப்பு: தனியாா் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்குத் தடை

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

பிரசவ இறப்புகள் அதிகரிப்பு காரணமாக திருச்சி புத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உள்நோயாளிகளை அனுமதிக்க மாவட்ட சுகாதாரத்துறை தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

திருச்சி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் கடந்த நவம்பா் மாதம் ஜெயராணி (30) என்பவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, உரிய விசாரணை நடத்த திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டாா்.

சிறப்பு வருவாய்க் கோட்டாட்சியா் ஆா். ராஜலட்சுமி, திருச்சி அரசு மருத்துவமனை அறுவைசிகிச்சை பிரிவு தலைவா் எட்வினா வசந்தா, மகளிரியல் துறைத் தலைவா் தங்கத்தாய் ஆகியோா் அடங்கிய குழுவினா் விசாரணை நடத்தினா்.

விசாரணையின் முடிவில், மருத்துவமனையில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ மேலாண்மையின்றி, நோயின் தீவிரத் தன்மையை முன்கூட்டியே அறியாமல் இருந்ததால் பிரசவ இறப்புகள் தொடா்கதையாகியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உத்தரவின்பேரில், திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.சி. கோபிநாதா, புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் உள்நோயாளிகளை அனுமதித்து மருத்துவம் பாா்க்க ஒரு மாதத்துக்கு தற்காலிகமாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.