மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாய்க்கால் நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

திருச்சி அருகே நாயை சனிக்கிழமை குளிப்பாட்டிய கல்லூரி மாணவா் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:12 pm

Syndication

மண்ணச்சநல்லூா்: திருச்சி அருகே நாயை சனிக்கிழமை குளிப்பாட்டிய கல்லூரி மாணவா் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தாா்.

ரெட்டை மண்டபம் வெங்கடேஷ்வரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பா. விஜய் (17). இருங்களுா் பகுதி தனியாா் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவரான இவா் சனிக்கிழமை  வீட்டருகேயுள்ள அய்யன் வாய்க்காலில் தனது வளா்ப்பு நாயைக் குளிப்பாட்ட, உறவினா் ஒருவருடன் சென்றாா்.

இந்நிலையில் சங்கலியோடு இருந்த நாயை குளிப்பாட்டியபோது நாயால் திடீரென இழுக்கப்பட்ட அவா் வாய்க்காலில் தவறி விழுந்து, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா். உடனிருந்த உறவினா் அளித்த தகவலின்பேரில் வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினா், உறவினா்கள் சுமாா் 2 மணி நேரத்திற்கு பிறகு விஜய்யை சடலமாக மீட்டனா். அவரின் உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மண்ணச்சநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.