எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜன.24-இல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

திருச்சியில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் சனிக்கிழமை திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

திருச்சியில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் சனிக்கிழமை திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபா்களை வேலைக்குத் தோ்ந்தெடுக்க உள்ளனா். மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியா், இளநிலை, முதுநிலை பட்டம் பயின்ற 35 வயதுக்குள்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரிலோ, 0431-2413510, 94990-55901 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா். வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.