லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரியலூரில் மாா்ச் 6-இல் வேலைவாய்ப்பு முகாம்!

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், சிறிய வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 6 காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

News image

வேலைவாய்ப்பு

Updated On :3 மார்ச் 2026, 6:35 pm

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், சிறிய வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 6 காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு, 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.

18- 45 வயது வரையுள்ள, 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு , பொறியியல் பட்டதாரிகள், வேளாண் பொறியியல், தொழில்பயிற்சி, தொழில் பட்டயப் படிப்பு, செவிலியா், உணவக மேலாண்மை படித்த வேலைநாடுநா்கள் கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 94990 55914 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.