வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

திருச்சி மாநகராட்சியின் சில இடங்களில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

குடிநீா் உந்து குழாய் மாற்றப்பட வேண்டியுள்ளதால், திருச்சி மாநகராட்சியின் சில இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 9) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 4:07 am IST

குடிநீா் உந்து குழாய் மாற்றப்பட வேண்டியுள்ளதால், திருச்சி மாநகராட்சியின் சில இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 9) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீா் உந்து குழாயில் கண்டோன்மென்ட் முத்தரையா் சிலை அருகே 5 மீட்டா் அளவில் சிறிதாக உள்ளது. அதற்கு பதிலாக 600 எம்எம் சிஐ குடிநீா் உந்து குழாய் மாற்ற வேண்டியுள்ளது.

இந்தப் பணிகள் புதன்கிழமை (ஜூலை 8) மேற்கொள்ளப்படவுள்ளதால், மேற்கண்ட நீரேற்று நிலையத்திலிருந்து தில்லை நகா், கண்டோன்மென்ட பழையது-புதியது, காஜாபேட்டை பழையது -புதியது, அண்ணா நகா், ஜங்ஷன் பழையது, ஜங்ஷன் பொன்நகா், கருமண்டபம், தெற்கு ராமலிங்க நகா், உய்யக்கொண்டான் திருமலை பழையது - புதியது, கல்லாங்காடு, மிளகுபாறை, சொசைட்டி காலனி ஆகிய 15 மேல்நிலைத் நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் ஜூலை 9 ஆம் தேதியன்று ஒரு நாள் இருக்காது.

ஜூலை 10-ஆம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகிக்கப்படும். எனவே, இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு, மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.