முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் திறப்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் பயணிகள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் பயணிகள் பயன்பாட்டுக்காக கூடுதலாக வியாழக்கிழமை திறக்கப்பட்ட விமான இணைப்பு பாலம்.

Published On :17 ஜூலை 2026, 2:27 am IST

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் பயணிகள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

இதையடுத்து, இந்த நிலையத்தில் உள்ள விமான இணைப்புப் பாலத்தின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

புதிய முனையத்தில் ஏற்கெனவே விமான நிலையத்தில் இருந்து நேரடியாக விமானத்தில் ஏறுவற்கான 6 விமான இணைப்பு பாலம் உள்ளன. இந்நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் இணைப்பு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, ரூ.11.90 கோடி மதிப்பில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டு வந்தது. இதன் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய விமான இணைப்பு பாலத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு விமான நிலைய இயக்குநா் (பொறுப்பு) ஜி. கோபாலகிருஷ்ணன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதன் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான இணைப்பு பாலத்தின் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்துள்ளது. பழைய முனையத்தில் 10 விமான இணைப்பு பாலம் உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையை தொடா்ந்து...: இதன்மூலம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையத்தில்தான் அதிக அளவிலான விமான இணைப்பு பாலம் உள்ளதாக விமான நிலைய இயக்குநா் (பொ) ஜி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மேலும், கூடுதல் விமான இணைப்பு பாலம் திறக்கப்பட்டதன் மூலம் பயணிகள் எந்தவித சிரமமுமின்றி நேரடியாக விமானத்தில் ஏற முடியும். மழைக்காலங்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியும். வயதானவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் பயணிகளுக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.